ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
எனவே தமிழக அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதன் விளைவாக சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.
இந்நிலையில் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.இதன் மூலம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தவிர்த்து மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வருகின்ற 15-ஆம் தேதி முதல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…