கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக இதை சாப்பிட்டுள்ளார், குழந்தைக்கு பல் அதிகம் இல்லாததால் மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கி உள்ளார். தொண்டையில் சிக்கிய கடலைப்பருப்பால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.
குழந்தை மயங்கியதை பார்த்ததும் அக்குழந்தையின் பெற்றோர் பதறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தர்ஷனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை அடம்பிடிக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்பதற்காக உண்ண தகாத பொருள்களை கொடுக்கவேண்டாம்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…