ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜு

Default Image

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே நேற்று  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது   கூறுகையில்,6 மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கைக்காட்டும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரும். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படு ம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ,அதிமுகவில் ஏதும் பரிசு உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த  அமைச்சர், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் 2021-ஆம் ஆண்டில்  வெற்றிபெற வேண்டும்  என்று உழைத்து வருகின்றனர். தலைவர்களை நம்பி அதிமுக இல்லை .தொண்டர்களை நம்பியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்