செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் போக்குவரத்து பல கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் சாலை வரி தள்ளுபடி, 100% பணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதால் செப்டம்பர் 30 வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…