செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை – உரிமையாளர்கள் சங்கம்!

Default Image

செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் போக்குவரத்து பல கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் சாலை வரி தள்ளுபடி, 100% பணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதால் செப்டம்பர் 30 வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்