தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…!

Default Image

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் பேருந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இந்த ஆலோசனையை தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்க முடியாது எனவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்தனர்.  இதனையடுத்து, தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Govt Employees - Protest
Aadhaar - Rahul Gandhi
NASA astronaut Sunita Williams return
Sunita Williams -Crew 9
ab de villiers and virat kohli
sekar babu tvk vijay