பணிச்சுமை தினம் உள்ளதாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்!

Default Image

குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 400 நோயாளிகளைக் கவனிக்க ஒரே நேரத்தில் 22 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்களுக்கு பணி சுமை அதிகம் உள்ளதாம்.

மன உளைச்சலுக்கு ஆளாகி செவிலியர்கள் அனைவரும் இணைந்து தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் பரவி வரும் நிலையில் செவிலியர்கள் இவ்வாறு செய்வது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்