murder [file image]
மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி. இவர் சடலமாக தன்னுடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி திருமங்கலம் அருகே பெரிய வாகைகுளம் மாயேன் நகரை சேர்ந்த காசம்மாள் (70) மூதாட்டியை மர்ம நபர்கள்கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஜூலை 12 மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டிகள் தொடர் கொலை சம்பவம் மதுரையில் நடைபெற்று வருவதால், நகைக்காக கொலை சம்பவங்களா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…