வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து உயிரிழந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு.
தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார்.
இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.இந்த வழக்கை ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில், முத்து உயிரிழந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலிஸ் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் இன்று காலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தொடர்ந்தார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…