வனத்துறையினரால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த வழக்கு.. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி மனு!

Default Image

வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து உயிரிழந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார்.

இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.இந்த வழக்கை ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில், முத்து உயிரிழந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலிஸ் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் இன்று காலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தொடர்ந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop