தீபாவளி வெளியாகும் படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.
தீபாவளியன்று எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவும், அப்படி அனுமதியின்றி திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.இதனால் பிகில் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளிக்காமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதலமைச்சர் பழனிசாமி, செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கடம்பூர் கூறுகையில்,சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…