11,12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் மார்ச் 24 ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18 ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே தேர்வு எழுதிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி 11, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டலவாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 37 மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…