தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்.!

11,12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் மார்ச் 24 ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18 ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே தேர்வு எழுதிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி 11, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டலவாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 37 மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024