ஈரோட்டை சார்ந்த ஆர்.ஜெயபாலன் இவர் ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மாலினி.இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.இவர்கள் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில் உள்ள குடியிருப்பில் தங்கி வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உட்புறமாக பூட்டிய நிலையில் இருந்து உள்ளது.சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர்.அப்போது உள்ளே கணவன் , மனைவி இருவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர்.
உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதை தொடர்ந்து வீட்டில் ஜெயபாலன் எழுதிய ஒரு கடிதம் போலீசார் கைப்பற்றினர்.
அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தங்களின் பெற்றோர்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என எழுதி இருந்தார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…