சட்டப்பேரவையில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.!

ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சட்டப்பேரவை இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அப்போது, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் காரணமாக கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்துள்ளது. நிவாரண தொகைக்காக ரூ.4896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ.638.85 கோடியும், தனிமைப்படுத்துதலுக்காக ரூ.262.25 கோடியும் தமிழக அரசு செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.