சென்னை:பெங்களூருவிலிருந்து சசிகலா வருகின்ற 8 ஆம் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.கொரோனா தொற்று காரணமாக 11 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார் .
சசிகலா சென்னை திரும்பும்போது அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .அவர் விடுதலையான நாளிலிருந்தே அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டும் அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மாலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் நடைபெற இருக்கும் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…