தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் ஓ.எஸ்.மணியன் போட்டியிட்டார். திமுக சார்பில் வேதரத்தினம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா்.
அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுக வேட்பாளா் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்துள்ளாா். பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை வாங்கியுள்ளார்.
வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்துள்ளாா். மேலும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் அரசு அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல பயன்படுத்தி ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…