அதிமுக 51 ஆண்டு தொடக்கம்.! சமாதான புறா பறக்கவிட்ட ஓபிஎஸ்.?

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொண்டாடிய ஓபிஎஸ், விழாவில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.   

அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

அதே போல, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அணியினர், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, நிகழ்ச்சியில் ஒருபகுதியாக ஓபிஎஸ் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். வெள்ளை புறாக்களை பறக்கவிட்டது, அதிமுகவில் சமாதானத்தை ஏற்படுத்த ஓபிஎஸ் செய்துள்ளாரா என்ற கேள்வி அதிமுகவினர் வசம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்