விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற ஓபிஎஸ்.! அன்பு நண்பர்.. நல்ல தலைவர்…

Published by
மணிகண்டன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, சினிமா , அரசியல் பிரபலங்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த திரளானோர் வந்து கொண்டு இருந்ததால், தேமுதிக கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று அதிகாலை சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விஜயகாந்தை பொதுக்குழுவில் பார்க்கும் போது நம்பிக்கை குறைந்தது -ரஜினிகாந்த்..!

சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சில நிமிடம் கண்கலங்கி விஜயகாந்த் உடல் அருகே ஓபிஎஸ் நின்றுவிட்டார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை தேற்றி அழைத்து சென்றனர்.

பின்னர் , விஜயகாந்த் குறித்து ஓபிஎஸ் வருத்தத்துடன் பேசுகையில், விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பு நண்பர் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், நல்ல தலைவராகவும் இருந்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவுபவர். நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, அந்த சங்கத்தின் கடன்களை தீர்த்தவர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டவர். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என வருத்தத்துடன் தனது இரங்கலை தெரிவித்துவிட்டு சென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

6 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

7 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

9 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

10 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

11 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

11 hours ago