எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்ட வீட்டிற்கு இழப்பீட்டுத்தொகை நிர்ணய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த்திருந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் ..? என ஜெ.தீபாவுக்கு கேள்வி நீதிபதி எழுப்பினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், இந்த வழக்கு விசாரணையை 2 பேர் கொண்ட கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் இது குறித்து தீபா கூறுகையில், சொத்துக்கான போராட்டம் அல்ல. உரிமைக்கான போராட்டம்.எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.நான் இப்போது ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியுள்ளேன்.நீதிமன்றத்தின் கேள்வி வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…