மதுரையில் பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை.!

NTK Party Person Balasubramanian was hacked to death in Madurai

மதுரை: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர். இன்று காலை பாலசுப்ரமணியன் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் இன்று காலை பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் கூரிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். இதனை அடுத்து, பாலசுப்ரமணியன் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் பிரதான சாலையில் அரசியல் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan