குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை பாரிமுனை குறளகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில், குறளகம் முதலாக பாரிமுனை சிக்னல் வரையில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, அவர்கள் கையில் குடியுரிமை சட்டம் குறித்தபதாகைகளையும், இந்திய தேசியக்கொடியையும் ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட சீர்மிகு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…