இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறலாம்.. 20% தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் திட்டம் தொடக்கம்.

சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், வாட்ஸ் அப் டிக்கெட் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதன்படி, 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் & சேரும் இடத்தை அனுப்பி டிக்கெட்டை பெறலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் HI என குறுஞ்செய்தி அனுப்பினால் மெட்ரோ சார்பில் டிக்கெட் புக் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். பயண விவரங்களை குறிப்பிட்டு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்பட்சத்தில் கியூ ஆர் கோர்டு பயணசீட்டு கிடைக்க பெறும்.

இந்த புதிய வசதி மூலம் ஒரு மொபைலிருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம்  கியூ ஆர் கோர்டு, மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு வரிசையில் வாட்ஸ் அப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,  வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பதிவு செய்தால் 20% தள்ளுபடி எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க வாட்ஸ் அப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூருவை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயிலும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

1 hour ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago