நாங்கள் இப்போ ஹீரோ.! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்.!
தற்போது வெளியான உச்சநீதிமன்ற உத்தரவின் படி, எங்களை இதுவரையில் ஸீரோ என்று கூறி கொண்டிருந்தவர்கள் முன்னாடி இப்பொது ஹீரோவாக மாறியுள்ளோம் என ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தனர்.
ஜூலை 11 பொது குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, வழக்கை வரும் நவம்பர் 21ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற அமர்வு மாற்றியது. மேலும் அதுவரையில் இபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடபட்டனர்.
இந்த உத்தரவை ஓபிஎஸ் தரப்பின்னர் தங்களுக்கு சாதகமாக வந்த தீர்ப்பாகவே பார்க்கின்றனர். இந்த தீர்ப்பு வந்த பிறகு ஓபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசுகையில், ‘ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை.
இப்போது வந்த உத்தரவை போலவே, வருகிற 21ஆம் தேதி ஜூலை 11 நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் தீர்மானங்கள் ரத்து செய்யப்படும் என நம்புகிறோம். இதுவரையில் இபிஎஸ் தரப்பினர் எங்களை ஸீரோ என்றனர். ஆனால், நாங்கள் இப்பொது ஹீரோவாக மாறிவிட்டோம். ‘ என வைத்தியலிங்கம் பேட்டியளித்தார்.