இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு. அதுபோல், புதிய கல்வி கொள்கையின் இலக்கான 2030-இல் 50% GER என்பதையும் ஏற்கெனவே எட்டிவிட்டது தமிழ்நாடு. எனவே தமிழ்நாட்டை பாஜக பின்பற்றவும்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…