மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோவையில் நடந்தது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். இதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது” என்று தமிழக ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். ஒரு தனித்த நிகழ்வை காரணம் காட்டி, ஒட்டுமொத்த மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமான முறையில் விசாரணை நடத்திய காவல்துறை – துப்பு துலக்கியுள்ளது. ஆனால், தொடக்கம் முதலே விசாரணையை சிதைக்கும் விதத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார். அவரின் பேச்சுக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.
மக்களிடம் பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம் என்ற பாஜக/ சங் பரிவாரத்தின் குறுகிய அரசியல் முயற்சி – அறிவிப்பிலேயே பிசுபிசுத்து விட்டது. கடந்த காலத்திலேயே ‘அண்டா பிரியாணி’ கலவரமும், தற்கொலையை கொலையாக சித்தரித்து பந்த் கலகமும் செய்த சங்கி சித்து விளையாட்டுக்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர்.
எனவேதான், இப்போது வெட்கமற்ற முறையில் ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக. அவரும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பேசிக் கொண்டுள்ளார். மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…