திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

tirupur

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையகோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வருகின்ற 3-ம் தேதி (ஆடி -18) அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 26.08.2023 அன்று சனிக்கிழமை பணிநாளாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. . உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாள் அன்று அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரூவூலகம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்