எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் !இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Default Image

எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் மனு அளித்தார்.

இதற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும்.மேலும் சபாநாயகர் நோட்டீசுக்கு பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால் சபாநாயகர் நோட்டீசுக்கு தடை கோரி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தற்போது  எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்