கொரோனா காலகட்டத்திலும் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த அனுமதித்து இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் தற்போது பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் வசூலிக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் முடங்கி இருக்கக் கூடிய நிலையில் தனியார் பள்ளிகள் முழுவதுமாக கல்வி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காலகட்டத்திலும் முழுமையாக கல்வி கட்டணத்தை வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். கொரோனாவின் தீவிரம், பெற்றோர் மாணவர்களின் மனநிலை ஆகியவை அறிந்துஅதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை அணிவகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…