திமுக ஆட்சியின் போது தமிழக மக்களுக்கு எதும் செய்யப்படவில்லை – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளான இன்று உடுமலைபேட்டையில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் மக்களுக்கு எதும் செய்யவில்லை எனவும் முக ஸ்டாலின் குற்றசாட்டுகிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். அவர்கள் தெரிந்து பேசுகிறார்களா தெரியாமா பேசுகிறார்கள் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறிய முதல்வர், கனிமொழி எம்பி திருப்பூர் மாவட்டத்தில் போகும் இடமெல்லாம் தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் என குற்றசாட்டினார். ஒரு விவசாயி முதல்வராக இருக்கக்கூடியது அதிமுக அரசு என்றும் வேளாண்குடி சிறந்ததால் உணவு உற்பத்தி அதிகரிக்கும், அப்போதுதான் உணவிற்கு பஞ்சமில்லாமல் இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஆகையால், எங்கள் அரசு பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது,

மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. உழைக்கும் விவசாயிகள், மக்களுக்கான அரசு அதிமுக தான் என்று கூறியுள்ளார். பாஜக மத்தியில் ஆளுகிறது தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்பது ஒரு தவறான குற்றசாட்டு என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை, அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்று மத்தியில் எடுத்து சொல்லி பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரே ஆண்டி 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்த வரலாற்று பெற்ற அரசு அதிமுக தான் என்றும் மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

25 minutes ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

1 hour ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

5 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

6 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

7 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

8 hours ago