உழைத்தவர்களுக்கு இல்லை! உழைக்காதவர்களுக்கு பதவி – ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்

Default Image

உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கம்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வேதனை இருக்கும். உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான். காரணம் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை, உழைக்காதவர்கள் பதவிக்கு வந்திருப்பது வேதனையாகத்தான் இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.

கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடி வரும்.  அதற்கு நான் உதாரணம். கட்சிக்கு நான் அழைத்து வந்தவர்கள் எம்எல்ஏ, மந்திரி ஆகிவிட்டனர். ஆனால் எனக்கு காலதாமதமாக வந்தது. காரணம் ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே தலைவர் என இருந்ததாலும் 63 வயதில் எம்பி பதவி கிடைத்தது.

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது. இதையெல்லாம் ஜீரணித்து கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் என்றைக்காவது பதவி வந்துவிடும் என கட்சிக்குள் வந்துள்ள இளைஞர்களுக்கு தான் இதை சொல்லுகிறேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்