தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இன்று அது குறித்த தகவலை சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில், ஆண்டிற்கு தமிழகத்துக்கு வரும் மழையளவில் 60 சதவீதம் தரும் வடகிழக்கு பருவமழை 20ஆம் தேதி பெய்ய தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சிட்ரஸ் புயல் காரணமாக இன்று (29ஆம் தேதி) வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
காலம் தாழ்த்தி பெய்வதால் மழையின் அளவு குறையாது எனவும் , மாறாக கணிக்கப்பட்ட அளவினை விட அதிகமாக தான் பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதகாலகட்டத்தில் 45 செமீ பெய்யும் மழையளவு சராசரியாக பெய்ய கூடும்.
கடந்த ஆண்டு 2021இல் 71 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. அதே போல, 2020 மற்றும் 2019ஆம் ஆண்டும் சராசரியை விட மழையளவு அதிகமாக தான் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு சராசரியை கணக்கிட்டு 88 -112 சதவீதம் மழைபெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு அதிக புயல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…