வடகிழக்கு பருவமழை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை கையாள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025