சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை -பிரேமலதா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Default Image

சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  சசிகலாவிற்கு   சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.   இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

அண்மையில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது. அபராதத்தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி  27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது.

இதனிடையே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிற்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இன்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவால் பதவி பெற்றவர்கள் என்று கூறினார்.இந்நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களானோம் .வரலாறு தெரியாமல் பிரேமலதா எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியாது.அவர்கள் கட்சி விவகாரம் குறித்து பேசுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்