நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Nomination: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20ம் தேதி தொடங்கிய நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள், சுயட்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய பலரும் வந்ததால் 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வாழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பின்னரும் வேட்புமனு வழங்க அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலரும் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்தனர்.

எனவே, நாளை வேட்புமனு பரிசீலினை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 கடைசி தேதியாகும்.  தமிழகம் முழுவதும் சற்று முன்பு வரை 834 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 700க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

8 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

10 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

11 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

12 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

13 hours ago