பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் -முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  கோவில்பட்டியில் தமிழிசைக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கொடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க திமுக சதி செய்து வருகிறது. கூலிப்படையினரை ஜாமினில் எடுத்தது திமுக.மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கான திட்டங்கள் கிடைக்கும். பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்