தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை – முதலமைச்சர் உரை

Published by
பாலா கலியமூர்த்தி

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான், பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம் என முதலமைச்சர் உரை.

பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். பெரியாரின் சுயமரியாதையை பிரச்சாரப்படுத்தும் விதமாக 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் 95 அடி உயர பெரியாரின் வெண்கல சிலை, பெரியாரின் வரலாற்றை விளக்கும் வகையில் ஒளி, ஒலி காட்சிகளுடன் கூடிய அருகாட்சியகம் மற்றும் மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளன. மேலும், கண்காட்சி, கேளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய மிகப்பெரிய பூங்காவாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய உலகம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு, இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. பெரியாரின் சிந்தனைகளை உலகில் பல்வேறு மொழியில் வெளியிட உள்ளது. பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.

தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை, பெரியார் திடலுக்கு வந்தாலே புத்துணர்சி வருகிறது. பெரியார் திடல் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே சமூக நீதிக்கான இடம். தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என்றும் உரையாற்றினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago