நேற்று மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைந்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சியில் தமிழக கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது .அதிமுக ஆட்சியில் ரூ.4.65 லட்சம் கோடியாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமியின் ஆட்சியில் தான் அதிக கடன் உள்ளது என கூறினார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அதிமுகவினர் வைத்த பேனரால் சென்னையில் சுபஸ்ரீ இறந்தார் , கோவையில் அனுராதா காயமடைந்தார். இந்நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக என்ன தகுதி இருக்கிறது..? என மு.க.ஸ்டாலின் கேட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 7.27 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாயி என கூறும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…