ரஜினிக்கு தனி கட்சி இனி செட் ஆகாது ! பாஜகவில் இணையவேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணையவேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது, ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது.ரஜினிகாந்த்  பாஜகவில் இணையவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.1996ல் ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தது என்று தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்