அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வருத்தம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான விஷயம் நடைபெற்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தலைவர், அமைச்சர்கள், சட்டமனற்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள் என கூறினார். அமைச்சரவை பட்டியலில் உங்கள் பெயர் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது உங்கள் பெயர் அதில் இடம் பெறவில்லை, இதனால் ஏதும் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து முக ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…