தமிழகத்தில் பாஜக தயவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது- ஹெச்.ராஜா

Default Image

தமிழகத்தில் பாஜக தயவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் தான்  தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக  உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் சரி ,தமிழகத்தில் பாஜக  இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில்  யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்