தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு மேல் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புரேவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு முக அருகில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் எனவும், அப்பொழுது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று மாலை 6 மணிக்கு மேல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பற்ற பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமிற்கு செல்லுமாறு அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, கனமழை பெய்யும் காரணமாக கடற்கரை, நீர்நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…