‘யாரையும் சும்மா விடக் கூடாது’ – கோவை மாணவி தற்கொலை..! ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..!

Published by
லீனா

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை .

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது.

ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.

மேலும், தங்கள் மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்த நிலையில், தலைமைறைவாக இருந்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற…

14 minutes ago
“இதுக்காக தான் அனுமதி கொடுக்கல”..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !“இதுக்காக தான் அனுமதி கொடுக்கல”..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !

“இதுக்காக தான் அனுமதி கொடுக்கல”..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான  எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான…

48 minutes ago
மிரட்டிய டொனால்ட் டிரம்ப்! வரியை குறைக்க ஒற்றுக்கொண்ட இந்தியா?மிரட்டிய டொனால்ட் டிரம்ப்! வரியை குறைக்க ஒற்றுக்கொண்ட இந்தியா?

மிரட்டிய டொனால்ட் டிரம்ப்! வரியை குறைக்க ஒற்றுக்கொண்ட இந்தியா?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா,…

2 hours ago
திமுக நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது! வீடியோ வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!திமுக நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது! வீடியோ வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!

திமுக நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது! வீடியோ வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…

4 hours ago
Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!

Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…

4 hours ago
ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!

ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!

லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…

5 hours ago