சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என சசிகலா தெரிவித்தாக தகவல்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என அதிமுகவில் இருந்து ஒதுங்கிய சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் என்னையே வேண்டாம் என்றதால் நானே ஒதுங்கினேன் எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால், தனித்தனியாக நின்று தோற்றுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக வீணாவதை பார்த்து கொண்டியிருக்கமாட்டேன் என்றும் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும், அதை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது நாள்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் அவ்வப்போது வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…