பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் இன்று ‘நம்ம ஊரு பொங்கல்’ கிராமிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக நிலைநாட்ட முடியாது என்று, மற்ற அரசியல் கட்சிகள் எண்ணி வந்த நிலையில், தற்போது வேரூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் 65 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு இணைப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.6,000 அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும், பக்தர்கள் நீராட அனுமதி தர வேண்டும் என்று எல் முருகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…