“திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.!” உதயநிதி பெருமிதம்.! 

திமுக பேச்சுப்போட்டியில் பங்கேற்பாளர்கள் பேசியதை கேட்டவுடன் திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என அறிந்து கொண்டேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tamilnadu Deputy CM Udhayanidhi stalin

சென்னை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், ” கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திமுகவில் அனைத்து அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பை கொடுத்தார்.

திமுக இளைஞரணிக்கு “என் உயிரினும் மேலான” எனும் பேச்சுப்போட்டியை நடத்த உத்தரவிட்டார். அதன்படி பேச்சுப்போட்டிகள் மாவட்டந்தோறும் தொடங்கின. இதற்காக 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு 47 இடங்களில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. 10 தலைப்புகள் கொடுக்கப்பட்டன.  85 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரது பேச்சையும் நான் கேட்டேன். அதனை கேட்ட பிறகு எனக்கு தோன்றியது என்னவென்றால், ‘திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.’  என அறிந்து கொண்டேன். இந்த போட்டியை சிறப்பாக நடத்திய திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்