தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை என்று பிரித்து உள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலத்தில் உள்ளது.இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.இதில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் கடந்த 16 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது.அரசின் உத்தரவுப்படி தொடர்ந்து 21 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களை பச்சை மண்டலமாக அறிவித்து வருகிறது.தூத்துக்குடியில் கடையாக கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் பின்னர் அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.எனவே இன்னும் 5 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் தூத்துக்குடி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…