ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது.

ஸ்டெர்லைட் ஆலை 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து. உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் தயாரிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது. மேலும் இந்த ஆக்சிஜன் தயாரிப்பை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

ஆக்சிஜன் உற்பத்தி 

கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த ஆலை மூலம் இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல மாநிலங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் 350 டன் வாயு நிலையிலான  ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

முடிவடையும் கால அவகாசம் 

 வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு  உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், பேரணியாக சென்று சில நாட்களுக்கு முன்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கே.பாலகிருஷ்ணன் 

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 230 மெட்ரிக் டன் மட்டுமே தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. இப்போது ஆக்சிஜன் தயாரிப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை. னவே, அந்த ஆலையை பூட்டி சீல் வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்