தேர்தல் நேரத்தில் எவ்வளவு ரொக்க பணத்தை கொண்டு செல்லலாம்.?

Published by
மணிகண்டன்

Election2024 : தேர்தல் நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. – தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்னன் (சென்னை மாநகராட்சி ஆணையர்).

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், நாடு முழுவதும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது. இந்த தேர்தல் விதிமுறைகளானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரையில் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும். மற்ற மாநிலங்களிலும் இதே போல தேர்தல் நடைபெறும் நாள் வரையில் அமலில் இருக்கும்.

இந்த தேர்தல் சமயத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்க பணமாக யாரும் வெளியில் கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு கொண்டு செல்லும்போது தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் கைப்பற்றினால் அதற்கு உரிய ஆவணங்கள் கொடுத்த பிறகே பணம் திரும்ப கிடைக்கும்.

இது தொடர்பாக சென்னையில் தேர்தல் வேலைகளை கவனித்து வரும், சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன்.IAS., தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் குறிப்பிடுகையில், பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இந்த தேர்தல் சமயத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலே எந்த ஆவணங்களும் இன்றி பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம்.

தேர்தல் வாக்குப்பதிவு நாள் 19ஆம் தேதி வரையில் மட்டும் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அண்மையில் இரண்டு மூன்று சம்பவங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று மருத்துவ செலவுக்காக ரொக்க பணத்தை ஒருவர் எடுத்து வந்ததாக கூறினார்கள். விசாரணைக்கு பின் அந்த பணம் அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த சமயம் ரொக்கபண பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும்.

உங்கள் அத்தியாவசியத்தை அதிகாரிகள் புரிந்து கொள்வதை விட, மக்கள் தேர்தல் விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரையில் மக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலே வெளியில் ரொக்க பணமாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்பதே எங்களது அறிவுரை என கூறினார்.

மேலும் , செய்தியாளர்களிடம் இன்று சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 2.35 கோடி ரூபாய் ரொக்க பணம், 8000 கிராம் தங்கம் அதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய், 12 ஐபோன் என மொத்தம் சுமார் 7.5 கோடி ரூபாய் அளவில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

 

 

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

46 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago