தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை !

Default Image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாரத்துறை தெறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நிலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாரத்துறை அறிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்